
உன்னோடு நான் என்னோடு நீ
என்று தானே நேசித்தோம் விதி
பாதை மாற்றி சென்றது விதி
பாதை மாற்றினாலும் நம்
இதயம் இன்னும் இடம் மாறவில்லை
இந்த நிமிடம் வரை உன்னாலேதான்
என் இதயம் துடிக்கின்றது
உன் இதயமும் இந்த நிமிடம் வரை
உன்னை எனக்கு உசிராய் பிடிக்கும்
என்று சொல்லிவிட மறுக்கவில்லை
வாழ்க்கை திசை மாறியாது
தொலை தூரத்தில் இருந்து
நேசித்தாய் இறுதி வரை நான்
தொட முடியாத தூரம் சென்று
வாழ்கிறாய் என் இதயம் தொட்டு
ஒன்று மட்டும் சொல்லி விடுகிறேன்
காலம் நம்மை பிரித்தாலும்
தூரம் நம்மை தொலைத்தாலும்
அழியாத நம் நினைவோடு
உன்னுள் நான் ஒருத்தி என்னுள்
நீ ஒருவன் என்றே வாழ்ந்திடுவோம்
உன்னிடம் இருந்து வெறுப்பை
மட்டும் நான் சம்பாதிக்கவே
மாட்டேன் .......உன்னிடம்
வெறுப்பை சம்பாதிப்பதற்கு
நான் மரணத்தை விலை
கொடுத்து வாங்கிடலாம் v.m.j.gowsi —